தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலாஜாவில் கொட்டித்தீர்த்த மழை; தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்: வாகனங்கள் சர்வீஸ் சாலையில் சென்றதால் நெரிசல்

வாலாஜா: வாலாஜாவில் பலத்த மழை பெய்ததால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் வாகனங்களை சர்வீஸ் சாலையில் அனுப்பி வைத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஓடியது. தாழ்வாக உள்ள சாலைகள், தெருக்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது.
Advertisement

இந்நிலையில் பலத்த மழையால் வாலாஜா டோல்கேட் அருகே வேலூரிலிருந்து சென்னை செல்லும் சாலையில் இன்று அதிகாலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனைக்கண்ட வாகன ஓட்டிகள், பள்ளத்தில் இறங்கினால் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகும் என்ற அச்சத்தில் திடீரென தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் அடுத்தடுத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

தகவலறிந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் தார், ஜல்லி உள்ளிட்டவைகளை கொண்டு பள்ளத்தில் கொட்டி அதனை இயந்திரம் மூலம் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். பள்ளம் சீரமைப்பு பணி காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ‌ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.

Advertisement

Related News