தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டில் மோதி தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து 9 மாணவர்கள் படுகாயம்: ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

மங்கலம்பேட்டை: விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டில் மோதிய பள்ளி வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அப்போது ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே விஜயமாநகரம், புது விளாங்குளத்தை சேர்ந்தவர் சேகர். இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் மாணவர்களை ஏற்றி வரும் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். பள்ளி நாட்களில் மாணவ, மாணவிகளை வேனில் ஏற்றிச் சென்று பள்ளியில் விட்டு விட்டு, மாலையில் வகுப்புகள் முடிந்ததும் வேனில் ஏற்றிச் சென்று வீடுகளில் விடுவது வழக்கம்.

Advertisement

இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் மங்கலம்பேட்டை அருகே கோ.பவழங்குடி கிராமத்தை சேர்ந்த 10க்கு மேற்பட்ட மாணவர்களை வேனில் ஏற்றிக்கொண்டு, விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். கோ.பூவனூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், ரயில்வே கேட்டின் பக்கவாட்டு கம்பிகளில் மோதி தண்டவாளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவர்களின் அலறினர்.

அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, வேனுக்குள் சிக்கி படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஸ்வின், ஜெகதீஸ், வசந்த், அஸ்விகா, அனந்திகா உள்ளிட்ட 9 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த நேரத்தில் ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் பாலக் ராம்நிகி விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டதுடன், கேட் கீப்பரிடம் சம்பவம் குறித்து விசாரணை செய்தார். பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தில் கவிழ்ந்து 9 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement