தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3 லட்சம் வாக்காளர்கள் உயர்ந்தது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்

பீகாரில் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.42 கோடி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.45 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது. சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது எப்படி என சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

Advertisement

இது குறித்து தேர்தல் அதிகாரிகள் நேற்று கூறுகையில்,பீகாரில் செப்டம்பர் 30ம் தேதியுடன் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்தது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடி என்று அக்டோபர் 6ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலின் ஒவ்வொரு கட்டத்திலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு வரை தகுதியான வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் விதிகளில் கூறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை தொடர்ந்து 3 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்றனர். பேரவை தேர்தலில் முதல் கட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் தேதி அக்டோபர் 17 மற்றும் இரண்டாம் கட்டத்திற்கான தேதி அக்டோபர் 20 ஆகும்.

Advertisement