தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் உள்ள புதிய வாக்காளர்கள் உள்பட அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை கிடைக்க வேண்டும்: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் ஆர்ஜூனா பேச்சு

சென்னை: புதிய வாக்காளர்கள் உள்பட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க வேண்டும் என சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் ஆர்ஜூனா பேசினார். வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் சிவானந்த சாலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;

Advertisement

நாம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம், ஒன்றிய அரசை எதிர்த்தும் அதே போல தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும். தமிழக வெற்றி கழகம் சார்பாக நடத்தப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற மேடைகளை சரி செய்ய வேண்டும் எனவும், அதேபோல பல்வேறு கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து மாறி மாறி கூறி வருகின்றனர். வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அடுத்து உங்களுடைய ஆதார் செல்லுபடி ஆகாது, அதேபோல பாஸ்போர்ட் எடுக்க முடியாது என்ற நிலை வரலாம். எஸ்.ஐ.ஆரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என இங்கு யாரும் கூறவில்லை.

நடைமுறைப்படுத்தலாம் ஆனால் அது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு வீடியோ மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு செய்திருக்கலாம். இதனை தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். 18 முதல் 20 வயது உடையவர்களின் வாக்குகள் பறிபோகாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், புதிய வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க வேண்டும். இதுதான் நமது குறிக்கோள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News