தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம் திமுக தாக்கல் செய்த வழக்கு வரும் 11ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகள் விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு ஒன்று கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது . எஸ்.ஐ.ஆர் மூலம் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற அச்சம் உள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.

Advertisement

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் ஆஜரான வழக்கறிஞர்கள் விவேக் சிங் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில்,‘‘எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், திமுக தாக்கல் செய்துள்ள மனுவை வரும் 11ம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை பட்டியலிட்டு விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

Advertisement