தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செப்.30ம் தேதிக்குள் தயாராகுங்கள்: அக்டோபர்-நவம்பரில் பணிகள் தொடங்கும்

 

Advertisement

புதுடெல்லி:பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கு முன்பாக தீவிர திருத்தப் பணிகளை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் மாநில தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் இது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் அடுத்த 10 முதல் 15 நாட்களில் தீவிர திருத்த பணிகளுக்கு தயாராக இருக்குமாறு தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு ஆயத்தமாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பல மாநில தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே கடைசி தீவிர திருத்தத்திற்குப் பிறகான வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement