தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பு தலைமை தேர்தல் ஆணையர் நாளை மறுதினம் ஆலோசனை

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு வாக்காளர் அட்டை எண்ணும், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு வாக்காளர் அட்டை எண்ணும் ஒரே எண்ணாக உள்ளது. இதன் மூலம் மேற்குவங்கத்தில் போலி வாக்காளர்கள் அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் உள்ளனர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதை கட்டமாயமாக்கும் பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வரும் செவ்வாய்க்கிழமை(18ம் தேதி) ஒன்றிய உள்துறை செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடைமுறை சாத்தியங்கள், பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Advertisement

* தவறுகளை மூடி மறைக்கும் செயல்

திரிணாமுல் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாரிகா கோஷ் கூறுகையில், ‘நகல் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பட்டியல் தரவு மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையம் முன்பு 3 அறிக்கைகளை வௌியிட்டது. இப்போது வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இது வாக்காளர் பட்டியல் மோசடிகள் குறித்த தவறுகளை மூடி மறைக்கும் செயல்’ என்று தெரிவித்தார்.

Advertisement

Related News