தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை; ராகுல், பிரியங்கா, ரேவந்த் தேஜஸ்வி பங்கேற்பு: ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனம்

பாட்னா: பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமை யாத்திரையில் ராகுல், பிரியங்கா, ரேவந்த், தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். பீகாரில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்கு திருட்டை கண்டித்தும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘வாக்காளர் உரிமை யாத்திரை நடைபெற்று வருகிறது. கடந்த 24ம் தேதி அராரியாவில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகக் கடுமையாகச் சாடினார். மேலும், ‘தேர்தல் ஆணையம் தற்போது பாஜகவின் கிளை போல செயல்படுகிறது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காக்கவே நானும் ராகுல் காந்தியும் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளோம்.

Advertisement

மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது. இந்த யாத்திரை, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் உண்மை முகத்தை மக்கள் முன் அம்பலப்படுத்தியுள்ளது’ என்றார். இந்நிலையில் இன்று சுபால் மாவட்டத்தை யாத்திரை அடைந்தது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் பீகார் மாநிலப் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லாவரு, ‘கடந்த தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெறாமல் இருந்திருந்தால், இன்று காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்திருக்கும். வாக்குத் திருட்டு காரணமாகவே ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கான ஆதாரங்களை வைத்துள்ளோம்.

அதனால்தான் அவர்களை ‘வாக்குத் திருடர்கள் - ஆட்சியைக் கைப்பற்றிய திருடர்கள்’ என்று கூறுகிறோம்’ என்றார். 16 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, 20 மாவட்டங்களில் 1,300 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்து, செப்டம்பர் 1ம் தேதி பாட்னாவில் நிறைவடைய உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement