தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணைய குழு ஆய்வு

கொல்கத்தா: பீகாரை தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில் மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணைய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

Advertisement

இதுகுறித்து தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எஸ்.பி.ஜோஷி மற்றும் துணை செயலாளர் அபினவ் அகர்வால் ஆகியோர் மேற்குவங்கத்தின் கூச்பெஹார், அலிபுர்துவார் மற்றும் ஜல்பைகுரி ஆகிய மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்பார்வையிடுவார்கள். இந்த பயணத்தின்போது, அவர்கள் பூத் அளவிலான அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வார்கள். மேலும், அரசியல் கட்சி தலைவர்களுடனும் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

ஜோஷி தலைமையிலான இரு உறுப்பினர்களை கொண்ட குழுவினர் மூன்று மாவட்டங்களில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அனைத்து உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். மேலும், இந்த குழு இன்று காலை கூச்பெஹாருக்கு செல்வதற்கு முன், அலிபுர்துவாரில் களப்பார்வை பணியில் ஈடுபடுவர். அடுத்தநாள்(நாளை) ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங்கின் சில பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்வர்.

Advertisement

Related News