தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாக்காளர் பட்டியல் தயாரிப்பது கலெக்டராம்... முறைகேடு குறித்து எடப்பாடி புதுஉருட்டு

விருதுநகர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை 9 மணிக்கு சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சக அதிபர்களை சந்தித்து கலந்துரையாடினார். பட்டாசு ஆலை தொழிலாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் சிவகாசியில் இருந்து விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சென்றார்.

சாத்தூர் முக்குராந்தலில், வேனின் மீது நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதானே? அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி.

அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்? அதிமுக, பாஜ கூட்டணி வைத்ததும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் மடைமாற்றம் செய்கிறார் துரைமுருகன்’’ என்று தெரிவித்தார். தேர்தல் ஆணையத்துடன் பாஜ கூட்டு வைத்து, வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடத்தியதாக ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றம்சாட்டி உள்ளார். சிறப்பு தீவிர திருத்தத்திலும் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுபற்றி நேரடியாக கண்டனமோ, கருத்தோ சொல்லாமல் பாஜ ஆதரவாக எடப்பாடி கருத்து தெரிவித்து உள்ளார். தேர்தல் என்று வந்தால் அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுவார்கள். மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் அதிகாரிகளாக மாறுவார்கள். இது கூட தெரியாமல் கூட்டணியில் உள்ளதால் பாஜவுக்கு வலிக்காமல் அதிகாரிகள் மீது எடப்பாடி குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related News