தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியல் படிவம் தராததால் நடுரோட்டில் பெண் அதிகாரிக்கு பளார்: சண்டையை விலக்கிவிட்ட பெண்ணுக்கும் அடி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரியைப் படிவம் தராத ஆத்திரத்தில் பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சரிபார்த்து வருகின்றனர். ராய்ப்பூரில் உள்ள காளி மாதா வார்டு பகுதியில் வந்தனா சோனி என்ற பெண் அதிகாரி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சவிதா பட்வால் என்ற பெண், தனக்குரிய வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் ஏன் குறித்த நேரத்தில் வீட்டிற்கு வரவில்லை எனக் கேட்டுத் தகராறு செய்துள்ளார்.

Advertisement

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண், அரசாங்கப் பணியில் இருந்த பெண் அதிகாரியை நடுரோட்டில் வைத்துத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது சேலையைப் பிடித்து இழுத்துத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலைக் கண்ட அங்கிருந்த நபர் ஒருவர் சண்டையை விலக்கச் சென்றுள்ளார். அவரையும் அந்தப் பெண் கன்னத்தில் அறைந்து விரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட அதிகாரி வந்தனா சோனி அளித்த புகாரின் பேரில், கம்ஹார்டிஹ் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராய்ப்பூரில் அரசுப் பணியில் உள்ள தேர்தல் அதிகாரி தாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News