தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க 20 முதல் 23ம் தேதி வரை சிறப்பு முகாம்: மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க வரும் 20 முதல் 23ம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
Advertisement

இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க சிறப்பு முகாம்கள் வரும் 20,21,22,23 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த மாவட்டங்களை சார்ந்த அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தென் சென்னை மாவட்டத்திற்கு தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கே.கே.நகரில் உள்ள மாநில வள மற்றும் பயிற்சி மையம், அடையாறு புனித லூயிஸ் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, தேனாம்பேட்டை சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, வட சென்னை மாவட்டத்திற்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருவொற்றியூரில் உள்ள அன்பாலயா அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி,

அண்ணா நகர் பஸ் டிப்போ அருகில் உள்ள மேரி கிளப் வாலா செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள முக்தி செயற்கை அவயவங்கள் நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், பூந்தமல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

இந்த முகாம்களில் கலந்துகொள்ளும் பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம், கைப்பேசி, யுடிஐடி அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News