தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விசாகப்பட்டினத்தில் நாகப்பாம்புக்கு அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் 8 தையல்கள் போட்டனர்

திருமலை: விசாகப்பட்டினத்தில் தலையில் அடிபட்ட வெள்ளை நாகப்பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்து 8 தையல்கள் போட்டப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிந்தியா பகுதியில் உள்ள கடற்படை உணவகம் அருகே நேற்று வெள்ளை நாகப்பாம்பு ஒன்று ஓடியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் பாம்பு அங்குள்ள ஒரு அட்டைப் பெட்டிக்குள் சென்றது. பயந்துபோன அப்பகுதி மக்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த நாகராஜு கருவிகளை பயன்படுத்தி வெள்ளை நிற நாக பாம்பை பிடித்தார். அப்போது வெள்ளை நிற நாக பாம்பின் தலையில் தோலில் காயங்கள் இருப்பதைக் கவனித்தார். உடனடியாக அதை இந்துஸ்தான் ஷிப்யார்ட் காலனியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு, மருத்துவ அதிகாரி சி.எச். சுனில் குமார் பாம்பிற்கு மயக்க மருந்து கொடுத்து, காயத்தில் அறுவை சிகிச்சை செய்தார். தலையில் தோலில் இருந்த காயத்திற்கு 8 தையல் போடப்பட்டது. பாம்பு முழுமையாக குணமடைந்த பிறகு பாதுகாப்பான இடத்தில் விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement