தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விருதுநகர் பகுதியில் வடகிழக்கு பருவமழையால் அதலைக்காய் விளைச்சல் அமோகம்: கிலோ ரூ.250 வரை விற்பனை

விருதுநகர்: வடகிழக்கு பருவமழையால் விருதுநகர் பகுதியில் அதலைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பான்மையான விளைநிலங்கள் கரிசல் மண் கொண்டவை. வானம் பார்த்த பூமியான இந்த கரிசல் பூமியில் மழை காலங்களில் பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை, கம்பு, பாசிப்பயிறு, துவரை, கேழ்வரகு ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மழை காலங்களில் இயற்கையாகவே கீரைகள், உணவுக் காளான்கள், அதலைக்காய் ஆகியவை தரிசு நிலங்களில் வளரும். இவைகளை பெண்கள் பறித்து சமைத்தது போக, மீதியை சந்தையில் விற்பனை செய்வது வழக்கம்.

Advertisement

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்த மண்ணில் அரிதாக விளையக்கூடிய அதலைக்காய் வயல்வெளிகளில் விளைந்து காணப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட இந்த அதலைக்காய் சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையுடையவை. இதை பறிக்கும் பொதுமக்கள் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கிலோ ரூ.250 வரை விற்கின்றனர். சீசனுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய காய் என்பதால் விலையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

Advertisement

Related News