தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விராலிமலையில் தேசிய கொடியுடன் கோயில் கோபுரத்தில் ஏறி போராடியவர் பரிதாப பலி

விராலிமலை: விராலிமலை கோயில் கோபுரத்தில் தேசிய கொடியுடன் ஏறி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் தவறி விழுந்து உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விராலிமலையில் மயில்கள் சரணாலயம் அமைக்கவும் வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம்(44) நேற்று காலை தேசியக் கொடியுடன் விராலிமலை முருகன்கோயில் கோபுர உச்சிக்கு சென்று போராட்டம் நடத்தினார்.

தகவலறிந்த விராலிமலை தாசில்தார் ரமேஷ், இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்டோர் கோபுரத்தின் அடியில் நின்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்காமல் ஆறுமுகம் போராட்டதை தொடர்ந்தார். இதையடுத்து மீட்பு குழுவினர் மேலே சென்று மீட்க முயன்ற போது அருகே நெருங்கினால் குதித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து மேலே சென்றவர்கள் கீழே இறங்கினர்.

பின்னர் தாசில்தார் ரமேஷ், உங்கள் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும், கீழே இறங்கி வாருங்கள் என்றதால் அவர் கீழே இறங்க தொடங்கினார். மீட்பு படையினர் உதவி செய்ய முற்பட்டபோது, யாரும் அருகில் வர வேண்டாம் எப்படி ஏறினேனோ அப்படி நானே இறங்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டார். கோபுரத்தில் இருந்த பொம்மைகளை பிடித்து இறங்கும்போது அவர் திடீரென தவறி சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தரைதளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு ஆறுமுகம் உயிரிழந்தார்.

Related News