தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வைரலோ வைரல்

சாக்ஸ் விலை ரூ.8 லட்சம்!

Advertisement

தி கிங் ஆஃப் பாப் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, இப்போதும் கொண்டாடப்படும் உலக இசைமேதை மைக்கேல் ஜாக்சன். நிறைய இசை ஆல்பங்களை வெளியிட்டவர் இசைக் கச்சேரிகளையும் நடத்தியுள்ளார். 1997ம் ஆண்டு பிரான்ஸில் மைக்கேல் ஜாக்சன் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அப்போது அவர் பயன்படுத்திய சாக்ஸ் அவருடைய மேக்கப் அறையில் கிடந்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பத்திரமாக எடுத்து வைத்துள்ளனர்.அந்த சாக்ஸ் தற்போது ஏலம் விடப்பட்ட நிலையில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் அதனை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 8 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கையுறை, சுமார் ரூ. 3 கோடிக்கும், அவர் அணிந்திருந்த தொப்பி, கடந்த 2023ம் ஆண்டு சுமார் ரூ. 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சாக்ஸ் தான் தற்போது வைரலாக இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

வந்துவிட்டார் விநாயகர்!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விதவிதமான வடிவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி, விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, பின்னர் வாகனங்களில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக நாடு முழுவதும் சிலைகள்,பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை வடிவமைத்து வர்ணம் தீட்டிவருகின்றனர். எங்கும் விநாயகர் சிலைகள், விதவிதமான உருவாக்க வீடியோக்கள் என வைரலில் களை கட்டத் தொடங்கிவிட்டன. மேலும் இதற்கிடையில் ஹெர்பல் விநாயகர்கள், விதைகள் தாங்கிய விநாயகர்கள், சதுர்த்தி விழா அன்பளிப்புகளும் களைகட்டி வருகின்றன.

Advertisement