தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வைரலோ வைரல்

கண்டித்த அஜித்!

Advertisement

நடிகர் அஜித்குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார். இந்த அணி, உலகின் பல்​வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வரு​கிறது. துபாய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்​கேற்ற அவர் அணி,​ பார்​சிலோ​னா​வில் நடந்த கார் பந்​த​யத்​தில் கடந்த வாரம் பங்​கேற்​றது. அங்கு கடந்த ஞாயிற்றுக்​கிழமை அஜித்​கு​மாரை பார்க்க ரசிகர்​கள் கூடினர். அதில் சிலர், அஜித்​கு​மாரை பார்த்​ததும் ஆரவாரம் செய்து விசிலடித்​தனர்.இதைக் கவனித்த அஜித் கோபமடைந்தார். விரலை அசைத்​து, ‘அமை​தி​யாக இருங்​கள்’ என்ற சைகை செய்​தார். உடனே ரசிகர்​கள் ஆரவாரத்தை நிறுத்தி அமை​தி​யா​னார்​கள். இந்​தக் காட்சி இணை​யத்​தில் வைரலாகி வரு​கிறது. அஜித், பார்​சிலோனா பந்​த​யத்தை முடித்​து​விட்டு துபாய் திரும்பி இருக்​கிறார். அடுத்து மலேசி​யாவில் டிசம்பர் மாதம் நடக்கும் கார் பந்​த​யத்​தில் பங்​கேற்​க இருக்​கிறார்​.

ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள்... உலக சாதனை படைத்த பெண்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேட் ஹென்டர்சன் என்பவர் காவல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என எண்ணிய ஜேட் ஹென்டர்சன், புல் அப்ஸ் உலக சாதனையை முறியடிக்க எண்ணியுள்ளார்.இதற்காக 24 மணி நேரத்தில் 7,079 புல் அப்ஸ்கள் எனும் உலக சாதனையை முறியடிக்கத் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அதன்படி அவர் 3500 புல் அப்ஸ்களை செய்து கொண்டிருந்தபோதே தசை நார் கிழிந்து பாதிக்கப்பட்டார்.இருப்பினும், சாதனையை கைவிட மனமில்லாத ஜேட் ஹென்டர்சன், தனது இலக்கை 24 மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக மாற்றிக் கொண்டார்.அதன்படி சுமார் 6 வார ஓய்வுக்கு பிறகு களமிறங்கிய ஜேட் ஹென்டர்சன், ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்களை எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்தார். முன்னதாக ஒரு மணி நேரத்தில் 725 புல் அப்ஸ்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஜேட் ஹென்டர்சன் 10 வருட முந்தைய சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். ஜெட்டின் இந்த சாதனை கண்டு உலக மல்யுத்த வீரர்களே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ஜேட்டுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Advertisement