தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வன்முறை நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்: ஒன்றிய அரசு

டெல்லி: வன்முறை நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் நேற்று மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 91 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
Advertisement

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இடஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 30 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சித்து வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்புகள் கடந்த மாதம் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 200 பேர் உயிரிழந்தனர். இதனிடையே இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திருந்தார்.

ஷேக் ஹசீனாவின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் கூடிய மாணவர்கள், “ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்” என்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். 2ம் நாளாக நேற்றும் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு எதிராக ஆளும் கட்சி ஆதரவாளர்களும் போராட்த்தில் குதித்துள்ளனர்.

இதனால் பல இடங்களில் மாணவர்களுக்கும், அவாமி லீக் கட்சி ஆதரவாளர்ளக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி மாணவர்கள் தாக்கினர். பதிலுக்கு மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் டாக்காவில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கும் தீ வைக்கப்பட்டது.

பல இடங்களில் பொதுசொத்துகள் சேதமடைந்தன. நேற்று நடந்த போராட்டத்தில் 14 காவலர்கள் உள்பட 91 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் வன்முறை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement