தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விதிமுறைகளை மீறி செபி தலைவர் மாதபி ரூ.36.50 கோடி வர்த்தகம்: காங்கிரஸ் மீண்டும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அதானி குழுமம் தொடர்பான நிறுவனங்களில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புரி புச் முதலீடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து மாதபி புரி புச், கணவர் தவல் புச் ஆகியோர் 2வது முறையாக நேற்று முன்தினம் விளக்க அறிக்கை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மாதபி புச் செபியின் முழு நேர உறுப்பினராகவும், பின்னர் செபி தலைவராகவும் இருந்த காலகட்டத்தில் ரூ.36.5 கோடி மதிப்புள்ள பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் வர்த்தகம் செய்துள்ளார். இது செபியின் விதிமுறை மீறலாகும். இதெல்லாம் பிரதமர் மோடிக்கு தெரியாதா? மேலும், 2017 முதல் 2021க்கு இடையே மாதபி புரி புச் வெளிநாட்டு சொத்துகளை வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்னை நிலவும் நிலையிலும் சீன நிறுவனங்களில் செபி தலைவர் முதலீடு செய்திருப்பதாவது பிரதமர் மோடி அறிவாரா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
Advertisement

Advertisement

Related News