தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரத்தை தொடர்ந்து நெய்வேலியில் இணை சார்-பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

Advertisement

நெய்வேலி: விழுப்புரம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்த நிலையில் இன்று காலை நெய்வேலியில் உள்ள சார்-பதிவாளர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் திரு.வி.க சாலையில் இணை சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள், நகரப் பகுதியில் உள்ள பத்திர பதிவுகள் இங்கு நடைபெறும். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 50 பத்திரப்பதிவுகள் நடைபெறும். இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விழுப்புரம், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதா லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து, திடீர் சோதனை நடத்த அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கண்ட இணை சார்-பதிவாளர் அலுவலகத்தை கடந்த ஒருவாரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8.10 மணி அளவில் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான 10 பேர் கொண்ட போலீசார் திடீரென்று அலுவலகத்தில் புகுந்து முன்பக்க கதவுகளை மூடி சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் எத்தனை பத்திர பதிவுகள் நடைபெற்றன. அதற்கான கட்டணங்கள் குறித்து கணக்கு வரவுகளை சேகரித்தனர். தொடர்ந்து 2 மணி நேர சோதனைக்கு பிறகு கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து இணை சார்பதிவாளர் தையல்நாயகி மற்றும் அங்கிருந்த அலுவலக பணியாளர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை 10.30 மணி வரை நீடித்தது. மேலும் இணை சார்-பதிவாளர் தையல்நாயகி, ஊழியர்கள் உள்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி அசோக் நகரில் உள்ள இணை சார்-பதிவாளர் தையல்நாயகியின் வீட்டில் இன்று காலை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையில் சுமார் 7 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Advertisement