விழுப்புரத்தை தொடர்ந்து நெய்வேலியில் இணை சார்-பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கண்ட இணை சார்-பதிவாளர் அலுவலகத்தை கடந்த ஒருவாரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8.10 மணி அளவில் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான 10 பேர் கொண்ட போலீசார் திடீரென்று அலுவலகத்தில் புகுந்து முன்பக்க கதவுகளை மூடி சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் எத்தனை பத்திர பதிவுகள் நடைபெற்றன. அதற்கான கட்டணங்கள் குறித்து கணக்கு வரவுகளை சேகரித்தனர். தொடர்ந்து 2 மணி நேர சோதனைக்கு பிறகு கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து இணை சார்பதிவாளர் தையல்நாயகி மற்றும் அங்கிருந்த அலுவலக பணியாளர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை 10.30 மணி வரை நீடித்தது. மேலும் இணை சார்-பதிவாளர் தையல்நாயகி, ஊழியர்கள் உள்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி அசோக் நகரில் உள்ள இணை சார்-பதிவாளர் தையல்நாயகியின் வீட்டில் இன்று காலை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையில் சுமார் 7 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.