தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரத்தில் அன்புமணி ஆர்ப்பாட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் கொடியேற்றம்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வலியுறுத்தி அன்புமணி ஆர்ப்பாட்டமும், வன்னியர் சங்க ஆண்டு விழவை முன்னிட்டு தைலாபுரத்தில் ராமதாஸ் கொடியேற்று விழாவும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் மோதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. அதிகார போட்டியில் கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இருவரும் தீவிரமாக உள்ளனர். மாவட்டம் தோறும் இருவரும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி தொண்டர்களின் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
Advertisement

இந்நிலையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 இடஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாட்களுக்கு மேலாகியும் இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்காமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று விழுப்புரம் புதியபேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் பாமக சார்பில் அன்புமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்திய அதே நேரத்தில் தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கம் 46ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த விழாவில் பாமக முன்னாள் தலைவர் தீரன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தி அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறாரே?

போராட்டம் எல்லா இடத்திலும் நடத்த வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். போராட்டம் யார் செய்தாலும் வாழ்த்துக்கள் தான்.

கேள்வி: பூம்புகாரில் நடைபெறும் மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுப்பீர்களா?

எல்லோரும் வரலாம். யாரையும் வரவேண்டாம் என நாம் சொல்ல முடியாது. அவர்களும் வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News