தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

Advertisement

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரெட்டிச்சாவடி : விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பல்வேறு விவசாய நிலங்களை கையகப்படுத்தி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் ஜானகிபுரத்தில் இருந்து சாலை பணிகள் தொடங்கி புதுச்சேரி-கடலூர் என 134 கிராமங்கள் வழியாக புறவழிச்சாலையை கடந்து நாகப்பட்டினம் வரை பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை பல்வேறு கிராமங்களுக்கு இடையே செல்கிறது.

இதனால் அருகில் உள்ள கிராமங்கள் இணைப்பு சாலையை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றன. இச்சாலையானது முழுமை பெறாமலே கடந்த சில மாதங்களுக்கு முன் போக்குவரத்து தொடங்கப்பட்டு, 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. பல்வேறு இடங்களில் இச்சாலை பணிகள் முழுமை பெறாததால் பல்வேறு விபத்துகளும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரெட்டிச்சாவடி அருகே சோரியாங்குப்பத்தில் இருந்து இணைப்பு சாலை தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த இணைப்பு சாலையில் போதிய ஏற்பாடுகள் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.

இரவு நேரங்களில் இணைப்பு சாலையை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் விபத்து ஏற்படுவதற்கு முன் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement