தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் கோஷ்டி பூசல்; தவெக மகளிர் அணி தலைவி மீது தாக்குதல்: நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தவெகவில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மகளிர் அணி தலைவியை தாக்கியதாக புகாரின்படி நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது.

Advertisement

நலத்திட்ட உதவிக்கு பணம் வாங்குதல், கட்சி பதவிகளுக்கு பணம் வசூலிப்பது போன்ற புகாரில் நிர்வாகிகள் மத்தியில் மோதல் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நலத்திட்ட உதவிக்கு பணம் வழங்காததால் நகர செயலாளரை தடியால் தாக்கி விரட்டி அடித்த புகாரில் மாவட்ட செயலாளர் குஷிமோகன் உள்ளிட்ட 6 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தவெக மாவட்ட மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதிலும் மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தவெக மகளிர் அணி நகர துணை செயலாளர் அஞ்சுகம் விழுப்புரம் தாலுகா போலீசில் அளித்த புகாரில், மகளிர் ஆலோசனை கூட்டத்துக்கு தவெக நிர்வாகி இப்ராகிம் சுகர்ணா தூண்டுதலின் பேரில் முபாரக், சுனில் ஆகியோர் சேர்ந்து மாவட்ட மகளிர் அணி தலைவி பிரேமாவையும், என்னையும் சரமாரியாக தாக்கினர் என்று கூறியுள்ளார். அதன் பேரில் இப்ராகிம் சுகர்னா, முபாரக், சுனில் ஆகிய 3 பேர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News