தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வில்லிவாக்கத்தில் பள்ளத்தில் தேங்கிய கழிவுநீர் சாலையில் வெளியேற்றம்: கடும் துர்நாற்றம்; பொதுமக்கள் அவதி

அம்பத்தூர்: வில்லிவாக்கத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த கழிவுநீரை நேற்று மின்மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அடாவடியாக இறைத்து, அந்த கழிவுநீரை பைப்புகள் மூலம் சாலையில் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகள் பெரிது அவதிப்பட்டனர்.

Advertisement

சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், 94வது வார்டான வில்லிவாக்கம், சிட்கோ நகரில் நீண்ட காலமாக மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அதிகளவு கழிவுநீர் தேங்கியிருந்தது. இதனால் ஏற்பட்ட கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்பட்டனர். இதுபற்றி வார்டு கவுன்சிலரும் 85து மண்டல குழுத் தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த கழிவுநீரை நேற்று டிராக்டரில் உள்ள மின்மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அடாவடியாக வாரியிறைத்து, அதை அங்குள்ள சாலையிலேயே வெளியேற்றினர். இதனால் அச்சாலை வழியே சென்ற வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். தற்போது அச்சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதுடன், அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுத்து, முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement