தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடுமலை அருகே கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதி கேட்டு கிராம மக்கள் மறியல்: மாற்றுப்பாதையில் சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்தது

உடுமலை: உடுமலை அருகே கோயிலில் வழிபாடு செய்ய அனுமதிகோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மாற்றுப்பாதையில் சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள கோயிலில் பல ஆண்டு காலமாக பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒரு தரப்பினர் பிரச்னை செய்ததால் கிராம மக்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-தளி சாலையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழித்தடத்தில் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து 10 மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில், மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாய்க்கால்மேடு வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, உடுமலை கால்வாயில் கவிழ்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து தளி போலீசார் விசாரிக்கின்றனர். உடுமலை கால்வாயில் தற்போது பிஏபி 4ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் செல்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News