தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளில் தனித்தனியாக முகாம் நடத்த கிராம மக்கள் வலியுறுத்தல்

பள்ளிப்பட்டு: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடையும் வகையில், அனைத்து இடங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான மக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கி பயனடைந்து வருகின்றனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடந்துள்ளன. தற்போது 3 முகாம்களில் நடத்த வேண்டியதை 2 முகாம்களாக குறைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், கொடிவலசா ஊராட்சியில் உள்ள அத்திமாஞ்சேரிபேட்டையில் வரும் 18ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. இதில் கொடிவலசா, நெடியம், சாமந்தவாடா ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்க வேண்டும் என்று ஊராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள அத்திமாஞ்சேரிப்பேட்டையில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்க நெடியம், சாமந்தவாடா ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்கு மறுத்துள்ளனர்.

மேலும், எங்களது பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். இதேபோல் வெளியகரம் ஊராட்சி நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்க சூராஜிபட்டடை, ராமச்சந்திராபுரம் ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, அந்தந்த பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement