தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலச்சரிவு ஏற்படும் இடத்தில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக கிராம மக்கள் புகாரால் பரபரப்பு

குன்னூர் : குன்னூர் அருகே நிலச்சரிவு ஏற்படும் இடத்தில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வரும் சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் மரங்கள் வெட்டுவதற்கும், பாறைகள் உடைப்பதற்கும் தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர்.

Advertisement

குறிப்பாக மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையினர் அனுமதி தர மறுத்து வருகின்றனர். இந்நிலையில் குன்னூர் பெள்ளட்டிமட்டம் அடுத்துள்ள எமகுண்டு கிராமத்தில் உள்ள ஓர் தனியார் தேயிலை தோட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட இடத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டு வருவதாக இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இந்த இடம் நிலச்சரிவு அபாயமுள்ள இடம் என்று வருவாய் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில் மரங்களை அவசர அவசரமாக கடத்தும்போது பெள்ளட்டிமட்டத்திலிருந்து எமகுண்டு கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாயில் மர கட்டைகள் விழுந்து, குடிநீர் குழாய்கள் சேதமானது.

மர வியாபாரிகள் தங்களது வருமானத்தை ஈட்டுவதற்காக நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடத்தில் மரங்களை அழித்து வரும் சம்பவம் எமகுண்டு கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Advertisement

Related News