ஆளே இல்லாத கிராமம் இருந்த ஒருவரும் இறந்தார்
Advertisement
கிராமத்தை விட்டு அனைவரும் வெளியேறிய நிலையில் கந்தசாமி என்ற முதியவர் மட்டும் தனது மனைவியுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். இவரது மகன்கள், மகள்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்று விட கந்தசாமியும், அவரது மனைவியும் சொந்த ஊரை விட்டு நகர மாட்டேன் எனக் கூறி விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கந்தசாமியின் மனைவி இறந்து விட தனி ஆளாகி விட்டார். தனது கிராமம் என்றாவது ஒரு நாள் பழைய நிலைமைக்கு மாறும் என்ற வைராக்கியத்துடன் மீனாட்சிபுரத்தை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வயது முதிர்வு காரணமாக கந்தசாமி இறந்து விட மீனாட்சிபுரம் கிராமம் ஆள் இல்லாத கிராமமாக மாறி உள்ளது.
Advertisement