தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலச்சரிவில் புதையுண்ட கிராமம் சூடானில் 1,000 பேர் பலி: ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்

கெய்ரோ: சூடான் நாட்டில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை ராணுவத்துக்கும் இடையே அதிகாரப்போட்டி காரணமாக கடந்த 2023ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த மோதலில் 40,000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து விட்டனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.

Advertisement

இதில் குறிப்பாக வடக்கு தார்பூர் பகுதியில் வீடுகளை விட்டு வௌியேற்றப்பட்ட மக்கள் சூடான் விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு சூடானின் மர்ரா மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் மர்ரா மலைப்பகுதிகளில் உள்ள டார்பரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால் நாடு முழுவதும் வௌ்ளத்தில் மிதக்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்ஒரு பகுதியாக தாராசின் கிராமத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அந்த கிராமமே அடியோடு மண்ணில் புதைந்து விட்டது.

இதுகுறித்து சூடான் விடுதலை இயக்க ராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் கனமழை காரணமாக தாராசின் கிராமம் முழுவதும் நிலச்சரிவில் மூழ்கி தரைமட்டமாகி விட்டது. இதில் இந்த கிராமத்தில் வசித்து வந்த 1,000 பேர் உயிரிழந்து விட்டனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் சடலங்களை மீட்கவும், ஐநா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement