விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குப்பதிவு; அதிமுக, தேமுதிக தலைவர்கள் புறக்கணித்தாலும் வளைத்து குத்திய தொண்டர்கள்: இதுவரை நடந்த தேர்தல்களை விட அதிக வாக்குகள் பதிவு
இதனால் இடைத்தேர்தலில் வாக்கு பதிவு குறையும் என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமாக சென்று வாக்களித்தனர். இதனால் மாலை வாக்குப்பதிவு முடிந்தபோது 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2019 இடைத்தேர்தலை விட 6.48 சதவீதம் கூடுதலாகும். கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இங்கு 72.78 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை ஒப்பிடுகையில் இந்த இடைத்தேர்தலில் 9.7 சதவீதம் அதிகமாகும். அதன்படி பார்த்தால், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் வாக்குப்பதிவை ஒட்டு மொத்தமாக புறக்கணித்திருந்தால் வாக்கு பதிவு சதவீதம் வெகுவாக குறைந்திருக்கும். ஆனால் அக்கட்சியின் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகள் மட்டுமே வாக்கு பதிவை தவிர்த்துள்ளது தெரியவருகிறது. அக்கட்சிகளின் தொண்டர்கள் உள்ளிட்டவர்கள் யாவரும் வாக்குப்பதிவை புறக்கணிக்காமல் வளைத்து வளைத்து வாக்களித்ததால் தான் இந்த அளவுக்கு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.