தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாகக் கொண்டு அதிமுக செயல்படும் என அதிமுக நிர்வாகிகளுடன் உடனான ஆலோசனைக்கு பிறகு பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
Advertisement

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது குறித்தான ஆலோசனையில் மூத்த நிர்வாகிகளுடன் ஈடுபட்டிருந்தார். அந்த ஆலோசனைக்கு பிறகாக அதிமுக தலைமை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 3 பக்கம் உள்ள புறக்கணிப்புக்கான அறிக்கையில் பல்வேறு பல்வேறு விசியங்களை எடப்பாடி பழனிசாமி முன்னிருத்தி காட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலா மற்றும் திருமங்கலம் ஃபார்முலா என பல்வேறு இடைத்தேர்தல் குறித்து குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி அதனை முன்னிருத்தியே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதன் காரணமாகவே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இனிவரக்கூடிய 2026-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் களம் காணும், அதற்கான தேர்தல் முன்னேடுப்புகளை நடத்த வேண்டும் என பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

Related News