தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விஜய்காந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது: பிரேமலதா திடீர் உத்தரவு

வேலூர்: விஜய்காந்த் புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என பிரேமலதா திடீர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் அண்ணா சாலை தனியார் மண்டபத்தில் தேமுதிக பூத் ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எல்லா கட்சிகளிலும், தமது கட்சி வளர்ந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்க போகிறது? எப்படி ஜெயிப்பது, எங்கெல்லாம் ஜெயிக்க வேண்டும் என்று ஆலோசனை செய்து வருகிறோம். அந்த வகையில் நம்பிக்கைகளை தொண்டர்களிடம் வெளிப்படுத்தி வருகிறோம். யாருடன் கூட்டணி என்பது கடலூரில் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும். தற்போது கட்சி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

எல்லாருக்கும், அவர்கள் கட்சி ஜெயித்து ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான் ஆசை. தேமுதிக ஒரு அரசியல் கட்சி. எங்கள் தலைவர் விஜயகாந்த். எனவே, எந்த ஒரு கட்சியும், அமைப்பும் விஜயகாந்த் படத்தை என்றைக்கும் பயன்படுத்தக் கூடாது. கூட்டணியில் வரும் கட்சி தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தலாம். தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது. ஆணவப்படுகொலை தடுக்க சட்டம் வந்தால் தேமுதிக வரவேற்கும். தேமுதிக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்று விஜயகாந்த் தெரிவித்ததே எங்கள் வழி. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேமுதிக பொருளாளர், மண்டல தேர்தல் பொறுப்பாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related News