தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜயகாந்தை வாக்குகளுக்காக விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: பிரேமலதா சொல்கிறார்

சென்னை: விஜயகாந்தை அரசியலுக்காக, வாக்குகளுக்காக விஜய் பயன்படுத்தினால் மக்களும் ஏற்க மாட்டார்கள். நாங்களும் ஏற்க மாட்டோம் என்று பிரேமலதா கூறினார். கடந்த 2006ம் ஆண்டு முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மறைந்த விஜயகாந்தின் 73வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Advertisement

இதையொட்டி கட்சியின் தலைமை கழகத்தில் மருத்துவ முகாம், ரத்ததான முகாமை நேற்று பிரேமலதா தொடங்கி வைத்தார். அப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அப்போது பிரேமலதா பேசியதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாதையில் இருந்து தவறாமல் அவர் செய்ததை போலவே எப்போதுமே தேமுதிக செய்யும்.

தேமுதிக முதல் கட்ட பிரசார பயணம் வெற்றி கரமாக முடித்துள்ளோம். போகும் இடம் எல்லாம் மக்களிடையே அன்பும் ஆரவாரமும் கிடைத்தது. நாங்கள் 20 ஆண்டு கட்சி. எதிர்க்கட்சியாகவும் இருந்து இருக்கிறோம். கேப்டன் இடத்தை யார் நினைத்தாலும் பிடிக்க முடியாது. விஜயன் கேப்டனின் பெயரை சொல்கிறார். கேப்டனின் வாக்குகளை அவர் எடுத்துக்கொள்கிறார் என்றால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கட்சி தொண்டர்களும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். லட்சக்கணக்கான தொண்டர்களை கேப்டன் உருவாக்கி இருக்கிறார். எனவே வேறு யாரும் கேப்டனை பயன்படுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News