தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் பார்த்தார் தியேட்டரில் கதறி அழுத பிரேமலதா

நெய்வேலி: கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலிசான நிலையில் நெய்வேலி தியேட்டரில் அப்படத்தின் முதல்காட்சியை பார்த்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கதறி அழுதார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்பயணத்தின் மைல்கல் திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ புதுப்பொலிவுடன் வெள்ளித் திரைக்கு மீண்டும் வந்துள்ளது.

Advertisement

இந்த படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள பிரபல திரையரங்கில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து நேற்று பார்த்தனர்.

முன்னதாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க திரையரங்கிற்குள் மூவரும் அழைத்து வரப்பட்ட நிலையில் படத்தை கைதட்டி ரசித்து பார்த்தனர். அப்போது சண்டைக் காட்சியில் விஜயகாந்த் முதன்முறையாக தோன்றியபோது பிரேமலதா கதறி அழத் துவங்கினார். அவருக்கு கண்ணீருடன் விஜய பிரபாகரன், சுதீஷ் இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் படம் முடிந்து வெளியே வந்த பிரேமலதா கூறுகையில், கேப்டன் பிரபாகரன் படத்தில் மாவீரன்போல் கேப்டன் நடித்துள்ளார். மாவீரனுக்கு மனைவியாக வாழ்ந்ததில் பெருமிதப்படுகிறேன். தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராட்டம் நடத்தி ஒப்பந்த தொழிலாளர்களை என்எல்சி நிர்வாகத்தினர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். உடனடியாக அவர்களை பணியமர்த்த வேண்டும் என்றார்.

Advertisement