தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் கூட்ட நெரிசல் 41 பேர் பலி ஒன்றிய அரசு அதிகாரிகள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர்: விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக நேற்று ஒன்றிய அரசு அதிகாரிகள் 2 பேரிடம் 2மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பொதுமக்கள் 28 பேர், பாதுகாப்பு பணியில் 22 போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் 25 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் விஜய் பிரசார பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை, பனையூர் தவெக கட்சி அலுவலக உதவியாளர் குரு, தவெக வழக்கறிஞர் அணி திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் அரசு மற்றும் கட்சி நிர்வாகி குருசரண் ஆகியோர் கடந்த 8ம்தேதி ஒப்படைத்தனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் சென்னை பதிவு எண் கொண்ட காரில் இந்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒன்றிய பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் (பவர்கிரிட்) 2 பேர் கரூர் சிபிஐ விசாரணை அலுவலகம் வந்தனர். அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரான 2 பேர், மின் விநியோகம் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர். 2 மணி நேரம் விசாரணைக்கு பின்னர் 11.30 மணியளவில் வெளியே வந்த 2 அதிகாரிகளும் காரில் ஏறி சென்றனர். இதனிடையே நேற்று காலை முதல் மதியம் வரை ஒருவர் பின் ஒருவராக வந்த 2ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், 4ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement