தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் மல்லையா, நிரவ் மோடி விரைவில் நாடு கடத்தல்?.. திகார் சிறையில் இங்கி. அதிகாரிகள் ஆய்வு

புதுடெல்லி: விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள். இது தொடர்பாக இங்கிலாந்து குழு திகார் சிறையில் ஆய்வு நடத்தி உள்ளது. கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அதேபோல், வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 2018-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.விஜய் மல்லையா, நீரவ் மோடி இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Advertisement

இந்த நிலையில் இங்கிலாந்து நீதித்துறை அதிகாரிகள் டெல்லி வந்து திகார் சிறையை ஆய்வு நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழு திகாரில் உள்ள உயர் பாதுகாப்பு அறைகளுக்கு சென்று கைதிகளுடன் உரையாடியது. இந்தியாவிற்கு நாடு கடத்தப்படும் குற்றவாளிகள் பாதுகாப்பான சூழ்நிலையில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் தேவைப்பட்டால் உயர் மட்ட கைதிகளை தங்க வைக்க சிறைக்குள் தனி பிரிவு கட்டப்படலாம் என்று இங்கிலாந்து குழுவிடம் இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ​​இந்தியாவிடம் இருந்து 178 நாடு கடத்தல் கோரிக்கைகள் வெளிநாடுகளில் நிலுவையில் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 20 கோரிக்கைகள் இங்கிலாந்திடம் உள்ளன. இதில் விஜய் மல்லையா, நிரவ் மோடி முக்கியமானவர்கள்.

Advertisement

Related News