தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை மாநாட்டில் விஜய் பேசியது அட்ரஸ் இல்லாத லெட்டர்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

சென்னை: மதுரை மாநாட்டில் விஜய் பேசியது அட்ரஸ் இல்லாத லெட்டர் போன்றது. அதற்கு நான் பதில் போட முடியுமா? என நடிகர் கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் டெல்லியில் இருந்து நேற்று இரவு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாவில், எத்தனை பேர் கையெழுத்து போட்டனர்? எத்தனை பேர் கையெழுத்து போடவில்லை என்பதெல்லாம், இங்கு பேசக்கூடாது. அது எல்லாம் நாடாளுமன்றத்தில் நடந்தது.அதுகுறித்து இங்கு பொது இடத்தில் பேசக்கூடாது.

Advertisement

நடிகர் விஜய் மதுரையில் மாநாட்டில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி மோதல். அதோடு சினிமா மார்க்கெட் போன பின்பு நான் அரசியலுக்கு வரவில்லை. மார்க்கெட் இருக்கும்போதே, படை பலத்துடன் தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று பேசி உள்ளார். இதில், கருத்து சொல்ல என்ன இருக்கிறது. எனது பெயரை சொல்லி இருக்கிறாரா? இல்லையேல் வேறு யார் பெயரை யாவது சொல்லி இருக்கிறாரா? இதேபோல் அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு, நான் பதில் போடலாமா? அது தவறு. அவர் எனது தம்பி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News