தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய்க்கு அனுபவம் இல்லாததே காரணம்: எடப்பாடி பழனிசாமி

கரூர் அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தொண்டர்களின் பாதுகாப்பை கட்சி தலைவர் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு நேரத்தை குறிப்பிட்டால் அந்த நேரத்திலேயே பரப்புரையை நடத்த வேண்டும். பல மணி நேரம் கழித்து வந்து பரப்புரை மேற்கொள்ளும்போது சில பிரச்னைகள் ஏற்படுகிறது.

Advertisement

இதை தவிர்த்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் யாரையும் குற்றம் சொல்வது பொருத்தமாக இருக்காது. தற்போது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்துகிற பரப்புரையில் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகளுக்கு அனுபவம் இருப்பதால் பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்படும் போது அதை ஒழுங்குபடுத்தி கொள்கிறார்கள்.

அதை மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும். விஜய் பேசிய போது ஆம்புலன்ஸ் வந்தது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். இனிமேல் எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட நிகழ்வு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தற்போது நடந்ததை ஒரு கொடூரமான நிகழ்வாகத்தான் நான் பார்க்கிறேன். மிக மிக வேதனையான ஒரு அதிர்ச்சியான நிகழ்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement