தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி: கரூர் டிஎஸ்பி, பாஜ நிர்வாகியிடம் சிபிஐ 4 மணி நேரம் விசாரணை

கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. நெரிசலில் சிக்கி பலியான கரூரை சேர்ந்த சுகன்யாவின் கணவர் தெய்வேந்திரன், கொடுமுடியை சேர்ந்த சதீஷின் சகோதரர் சக்திவேல் உள்பட 3 பேரின் குடும்பத்தினர் நேற்று காலை 10 மணியளவில் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

Advertisement

தொடர்ந்து, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விஜய் பிரசாத்திற்காக தவெகவினர் அனுமதி கேட்டது தொடர்பான விபரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களின் விபரங்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்திருந்த சேலம் மாவட்ட பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி, நேற்று பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.

Advertisement