தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் குறித்து நீதிமன்றம் விமர்சனம் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: விஜய் குறித்து நீதிமன்றம் விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளை மக்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். எனவே இனிமேல், மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் அமைத்துள்ள விசாரணை ஆணையம் நியாயமாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புவோம் என கனிமொழி எம்பி கூறினார். திமுக துணை பொதுச்செயலாளரும், பாராளுமன்ற திமுக அணி குழு தலைவருமான கனிமொழி எம்பி சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார்.

Advertisement

அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு தலைவருக்கான பண்பு இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றம் விமர்சனம் என்பது தனது கருத்துகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டும். மக்கள் இதைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

எனவே அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் நான் கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை. கரூர் சம்பவம் குறித்து ஏற்கனவே அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், நீதிமன்றம் அமைத்துள்ள விசாரணை ஆணையம், நியாயமாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புவோம். இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்.

Advertisement