தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் பிரசாரத்தில் 40 பேர் பலி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிக்கை; கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 40 பேர்உயிரிழப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும். விஜய் பேசிக்கொண்டிருக்கும்போது அதிகமான கூட்டம் கூடியதை கவனத்தில் கொண்டு கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கு பதிலாக கூட்டத்திற்குள் காவல்துறை தடியடி நடத்தி கலைத்தது, கூட்டத்திற்குள் அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து சென்றது, குறிப்பாக ஒரு வாகனத்தில் த.வெ.க. கொடி கட்டி வந்தது, தீயணைப்பு வாகனங்கள் இல்லாதது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபோன்ற ஏராளமான குளறுபடிகளால் தான் 40 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

Advertisement

ஆனால் த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்திருப்பது துரதிஷ்டமானது. அதே நேரத்தில் இரவோடு இரவாக நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் 1 நபர் விசாரணை கமிட்டி அமைத்து அரசு யாரை சமாதானப்படுத்தியது என்பதையும் விளக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நிரபராதிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உண்மையான காரணங்களை அறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement