தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் பிரசார நெரிசலில் சிக்கி பலியான 39 பேரின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கிய தவெக: வங்கி கணக்கில் செலுத்தினர்

கரூர்: விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னையால் 2 பேருக்கு யாரிடம் நிவாரணம் கொடுப்பது என தெரியாமல் கொடுக்கவில்லை. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

Advertisement

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளனர். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தவெக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. கரூருக்கு நேரில் சென்று விஜய் இந்த நிதியை வழங்குவதாக முதலில் கூறப்பட்டது. திடீரென அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 39 குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் தவெக சார்பில் நேற்று வழங்கப்பட்டது. சென்னையில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டது.

கரூர்-கோதூர் ரோட்டில் கோமாச்சிமேடு பகுதியில உள்ள கே.கே.நகர்2வது கிராசில் வசிக்கும் லாரி டிரைவர் பெருமாளின் 2 மகள்கள் பழனியம்மாள்(11), கோகிலா(8) ஆகியோர் நெரிசலில் சிக்கி பலியாகினர். அவரது வங்கி கணக்குக்கு ரூ.40 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஆனந்தஜோதி என்பவரின் மனைவி ஹேமலதா, குழந்தைகள் சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோர் உயிரிழந்தனர். அவரது வங்கி கணக்குக்கு ரூ.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் உயிரிழந்த 39 பேர்களின் குடும்பங்களுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேருக்கான நிவாரண தொகையை குடும்ப பிரச்னையால், யாரிடம் கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கான நிவாரண தொகை தவெக தரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News