தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் ஏன் மக்களிடம் இதுவரை செல்லவில்லை? ஆ.ராசா கேள்வி

சென்னை: கரூர் உயிர்ப்பலி சம்பவம் அறிந்ததும் முதல்வர் முதிர்ச்சி அடைந்த அரசியல் தலைவராக அணுகி உள்ளார். நீங்கள் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். ஏன் மக்களிடம் இதுவரை நீங்கள் செல்லவில்லை என்று விஜய்க்கு ஆ.ராசா எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: விஜய் கரூரில் கலந்துகொண்ட பிரசார நிகழ்ச்சியில் விலை மதிக்க முடியாத 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். எப்போது ஒரு தேவை வருகிறதோ, ஒரு பரபரப்பான பதற்றம் வருகிறதோ, மக்களுக்கு தேவை வருகிறதோ, அப்போது எங்களுடைய உயிரையும் பணயம் வைத்து களத்திலே போய் நிற்பதுதான் திமுகவின் வரலாறு என்பதற்காக சில உதாரணங்களை சொன்னேன்.

Advertisement

அதை போலவே, இப்போது எங்களுடைய முதல்வரும் செய்திருக்கிறார். இதிலே அரசியல் கிடையாது. ஆனால் களத்திலே நிற்க வேண்டிய தலைவர்கள், ஏன் கரூரில் களத்திலே நிற்கவில்லை?. செய்தி அறிந்ததற்கு பிறகும் அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்திப்பதற்குகூட வெட்கப்பட்டு கொண்டு, பயந்து கொண்டு ஏன் சென்னைக்கு வந்தீர்கள்? ஆதவ் அர்ஜுனா என்கின்ற நபர் ஒரு டிவிட் போடுகிறார். அந்த டிவிட்டில் நேபாளத்தில் நடந்தது போல, இங்கு ஒரு புரட்சி நடக்கும் என்கிறார். அரசியலமைப்புக்கு எதிரான ஒரு கருத்தைப் பதிவிட்டு, அதற்கு விமர்சனம் வந்த உடனே எடுக்கிறார். நான் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த பதிவை எடுக்கிற அளவிற்கு தமிழ்நாட்டுடைய மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள். இந்த உணர்வு அவர்களுக்கு தெரிந்த பிறகுதான் எடுத்திருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement