தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகர் விஜய் கூட்டத்திற்கு 4 வாரங்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும்: தவெக நிர்வாகிக்கு போலீஸ் பதில்

சேலம்: சேலத்தில் நடிகர் விஜய் பிரச்சாரம் தொடங்க அனுமதி கேட்ட விவகாரத்தில் குறைகளை நிவர்த்தி செய்து அனுமதி கேட்குமாறு போலீசார் பதில் அளித்துள்ளனர். புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மாலை 4 மணிக்கு பிரச்சாரத்திற்கு வருவதாக போலீசாரிடம் அனுமதி பெற்றுவிட்டு, பகல் 12மணிக்கு விஜய் கரூர் வந்துவிடுவார் என கட்சியின் சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள் 12 மணிக்கே கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர்.

Advertisement

இங்கு குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த வசதியும் செய்யாமல் இருந்ததால் ரசிகர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும், சாப்பிட ஏதும் இல்லாத நிலையில் கடும் பசியுடன் இருந்தனர். இதற்கிடையில் நடிகர் விஜய் இரவு 7 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தார். சிறிய இடத்தில் அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் இருந்ததால் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே நேரத்தில் நீதிமன்றம் விதித்த விதிமுறைகளையும் நடிகர் விஜய் தரப்பில் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 2 மாதத்திற்கு பின் நடிகர் விஜய் மீண்டும் சேலத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். இதையடுத்து வருகிற 4ம்தேதி சேலத்தில் பிரசாரம் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், த.வெ.க. மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்தீபன் கடிதம் கொடுத்தார். சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், தாளமுத்து நடராஜன் வீட்டின் அருகில் இருக்கும் மைதானம் என ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி கொடுக்குமாறு கேட்டிருந்தார்.

இதனை பரிசீலனை செய்த டவுன் உதவி கமிஷனர் சரவணன், த.வெ.க.வினருக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தங்களின் கட்சி நிகழ்ச்சி நடைபெறுவதாக சொல்லும் 4ம்தேதி, காவல்துறையினர் வெளிமாவட்ட பாதுகாப்பு பணிக்கு செல்வதால் தேவையான போலீசாரை நியமிக்க முடியாது. நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறியுள்ள இடங்களில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. 4ம்தேதியன்று சேலம் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து எவ்வளவு பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்ற விவரம் இல்லை.

எனவே தங்களின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க இயலாது. இனி வரும் காலங்களில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டி மனு அளிக்கும் பட்சத்தில், நிகழ்ச்சி நடக்க இருக்கும் தேதியில் இருந்து 4 வாரங்களுக்கு முன்னதாகவே மனு அளிக்குமாறும், மேற்கண்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மனு அளிக்கும் பட்சத்தில் காவல்துறை அம்மனு மீது நடவடிக்கை எடுத்து தகுந்த பாதுகாப்பு அளிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. போலீசார் அளித்த விளக்கத்தை மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்தீபன் ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement