தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; இன்ஸ்., டாக்டர்களிடம் சிபிஐ விசாரணை: பிரேத பரிசோதனை குறித்து கேள்வி

 

Advertisement

கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. நேற்று க.பரமத்தி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் காலை 10.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பகல் 12 மணி வரை விசாரணை நடத்தினர். இவரை தொடர்ந்து, காலை 11 மணிக்கு நாமக்கல், ஈரோடை சேர்ந்த 5 அரசு டாக்டர்கள் 2 கார்களில் சிபிஐ அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அவர்களிடம் பகல் 2 மணி வரை விசாரணை நடந்தது.

அப்போது, காயமடைந்தவர்களுக்கு வழங்கிய மருத்துவ சிகிச்சை, முதலுதவி நடவடிக்கைகள், எத்தனை பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தீர்கள். பிரேத பரிசோதனை அறிக்கை (ரிப்போர்ட்) யாரிடம் எந்த தேதியில் வழங்கினீர்கள். இறந்தவர்கள் கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தார்களா? மூச்சு திணறி எத்தனை பேர் இறந்தனர். அதிர்ச்சியில் எத்தனை பேர் இறந்தனர் போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. அவர்கள் அளித்த பதில்களை வாக்குமூலமாக சிபிஐ பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கரூர் மாவட்ட வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் 5 பேரிடமும் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisement