தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் ரோடு ஷோ ரத்தான நிலையில் புதுச்சேரியில் 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம்: அனுமதி கேட்டு போலீசிடம் மனு

 

Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவினர் 9ம்தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறை சீனியர் எஸ்பியிடம் மனு கொடுத்துள்ளனர். புதுச்சேரியில் தவெக கட்சி தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் ரங்கசாமி, டிஜிபியிடம் மனு அளித்தனர். 4வது முறையாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுக்கூட்டம் வேண்டுமென்றால் நடத்தி கொள்ளலாம்.

அதற்கான இடத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.கிறிஸ்துமஸ் விழாவுக்குள் எந்த தேதியில் வேண்டுமானால் நடத்திக் கொள்ளலாம் என புதுச்சேரி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இன்று நடத்த திட்டமிட்டிருந்த நடிகர் விஜய்யின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுக்கூட்டம் நடத்த தவெகவினர் முடிவு செய்தனர்.

அதன்படி, உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் (எக்ஸ்போ) வரும் 9ம்தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெகவினர் அனுமதி கேட்டு சீனியர் எஸ்பி கலைவாணனிடம் நேற்று கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, மேடை அமைக்கும் இடம், விஐபிக்கள் வரும்வழி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

Advertisement