தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூரில் இன்றும், நாளையும் எடப்பாடி 27ல் விஜய், 28ல் அன்புமணி; அடுத்தடுத்து படையெடுக்கும் தலைவர்கள்

 

Advertisement

கரூர்: கரூரில் இன்றும், நாளையும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். 27ம் தேதி விஜய், 28ம் தேதி அன்புமணி ஆகியோரும் கரூரில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று(25ம் தேதி), நாளை கரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக வேடசந்தூரில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை 6.30 மணிக்கு கரூர் வரும் அவர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பின்னர் சேலம் செல்லும் எடப்பாடி பழனிசாமி, நாளை மாலை 6 மணிக்கு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி, கிருஷ்ணராயபுரம் தொகுதி, குளித்தலை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் அவர் சேலம் செல்கிறார். இதேபோல் தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள்(27ம் தேதி) கரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். பாமக தலைவர் அன்புமணி 28ம் தேதி மாலை 4 மணிக்கு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் அருகில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக உழவர் சந்தை வரை நடைபயணம் செல்கிறார். பின்னர் உழவர் சந்தை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தவெக தலைவர் விஜய் 27ம் தேதி திருவள்ளூர், வடசென்னையில் பிரசாரம் செய்வார் எனவும், டிச. 13ம் தேதி தான் நாமக்கல், கரூரில் பிரசாரம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென நாளை மறுதினம் அவர் கரூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதேபோல் அன்புமணி 27ம் தேதி கரூரில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென இவர் தனது பிரசாரத்தை 28ம் தேதிக்கு மாற்றி உள்ளார். விஜய் செல்போன் மூலம் பேசி கேட்டுக்கொண்டதால் தான் அன்புமணி தனது பிரசாரத்தை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி, விஜய், அன்புமணி ஆகியோர் அடுத்தடுத்து 4 நாட்கள் பிரசாரத்துக்கு வருவது கரூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement

Related News