தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் மாநாட்டுக்கு சென்ற வேலூர் வாலிபர் மர்மச்சாவு: நடவடிக்கை கோரி எஸ்பியிடம் புகார்

வேலூர்: வேலூர் கஸ்பா பயர் லைன் அம்பேத்கர் நகரை சேர்ந்த என்.சீனிவாசன்(50) என்பவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

Advertisement

நடிகர் விஜய்யின் தவெக கட்சி மாநாட்டுக்காக, வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடில் உள்ள ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருபவரின் கட்டாயத்தின் பேரில், என் தம்பி மதனை அவரது சுயலாபத்துக்காக, தவெக மதுரை மாநாட்டுக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து, ஆகஸ்ட் 27ம் தேதி அன்று உடல் சிதைந்த நிலையில் சடலமாக எடுத்து வந்து ஒப்படைத்தனர். என் தம்பி மர்ம மரணத்துக்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை. ஆகவே என் தம்பியை கட்டாயப்படுத்தி வேனில் அழைத்து சென்று பிணமாக கொண்டு வந்தது சம்பந்தமாக, உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி மயில்வாகனன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தெற்கு காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

Advertisement

Related News