தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு

ஈரோடு: விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் தவெக கூட்டணிக்கு வரலாம் என ஈரோட்டில் மாஜி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தவெக தலைவர் விஜய் வருகிற 18ம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதால், முறையான அனுமதி பெறாததால் பிரசார கூட்டத்தை அனுமதிக்கக்கூடாது என மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தில் இன்று முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகிற 18ம் தேதி காலை சரியாக 11 மணி முதல் 1 மணிக்குள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம். யாரை கூட்டணியில் சேர்ப்பது என்பதை தலைவர் விஜய் முடிவு செய்வார். பெருந்துறையில் பிரசார கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து நோட்டீஸ் வழங்கப்படவில்லை. காவல்துறைக்கு மட்டுமே அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அறங்காவலர் மூலம் அந்த இடம் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது என உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கூட்டம் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

‘‘அதிமுகவில் நீங்கள் நீக்கப்பட்ட பிறகு தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தீர்கள். அந்த வழக்கு என்ன நிலையில் உள்ளதே?’’ என்ற கேள்விக்கு, ‘‘அது தனியானது‌. அதற்கு இதற்கும் தொடர்பில்லை. நான் விருப்பப்பட்டு இந்த இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். அதிமுகவில் உயர் மட்ட குழு வரை பதவியில் இருந்த என்னை நீக்க இயலாது. ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்து விளக்கம் தரவேண்டும். அன்புமணி விடுத்த அழைப்பு குறித்து தலைமை முடிவு செய்யும்’’ என்றார்.

Advertisement

Related News