தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை ஜனாதிபதி தேர்தல்; சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல்: பாஜக கூட்டணி கூட்டத்தில் பாராட்டு

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

டெல்லியில் இன்று நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜு, எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வரும் செப். 9ம் தேதி குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுநாளுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. அதனால் நாளை (ஆக. 20) காலை 11 மணிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சி.பி.ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை மேலாளராகவும், ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேர்தல் முகவராகவும் செயல்படுவார்கள். முன்னதாக ஜார்கண்ட் மற்றும் தெலங்கானா ஆளுநராகப் பணியாற்றியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனைப் பிரதமர் மோடி பாராட்டினார். அதேபோல் மற்ற தலைவர்களும் சி.பி.ராதாகிருஷ்ணனை பாராட்டினர்.

Advertisement